பாடசாலை மாணவர்களுக்கான அடையாள அட்டை பெற்றுக் கொள்வது தொடர்பான செயலமர்வு
பாடசாலை மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வது தொடர்பான செயலமர்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம் எச்.எம். கனி தலைமையில் (11) கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் உறுதிப்படுத்தப்பட்ட அடையாளம் என்ற நோக்குடன் நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம் என்ற கருப்பொருளில் இச்செயலமர்வு நடைபெற்றது.
இதன்போது கிண்ணியா வலயக்கல்வி பணிமனையின் வலயக்கல்வி பணிப்பாளர், கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிண்ணியா பிரதேச செயலகத்தின் தேசிய அடையாள அட்டைக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட கிண்ணியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.