பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான செயலமர்வு
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள (Saman Darshana Pandikorala) தலைமையில் நடைபெற்றது.
மின் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான வழியனுமதி, மரங்கள் அல்லது கிளைகளை வெட்டுதல், நஷ்ட்டஈடு வழங்கல் தொடர்பான வழிகாட்டல்கள் இதன்போது ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் ரோசன் வீரசூரியவால் (Rosen Weerasuriya) தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களுக்கான பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.மின் இணைப்பு மிக முக்கியமானது. மின் இணைப்பு பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கான வழியனுமதி பெறும் முறை, வழியனுமதி மறுக்கப்படும் போது பிரதேச செயலாளர்களின் வகிபாகம் குறித்து சட்ட ரீதியான அடிப்படைகளை தெளிவுபடுத்த முன்வந்தமை குறித்து தமது நன்றிகளை இதன்போது சமன் தர்சன பாண்டிகோராள ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் (J.S. Arulraj), மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.ஆர்.ஜயரத்ன(P. R. Jayaratne), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்களும் கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri