வெளிநாடு செல்லும் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளின் பின்னணி!
பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெண்கள் அயல்நாடுகளை நோக்கி செல்வதாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தின் பின் பல நுண்நிதித் திட்டங்கள் மூலம் பெண்களுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டு பெண்களைக் கடனாளிகளாக மாற்றியிருக்கின்றனர்.
இதனால் பெண்கள் தமது கடன்களைச் செலுத்த முடியாமல் வேறு இடங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை உருவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையிலே, வெளிநாடு செல்லும் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றிய பல விடயங்களை கீழே உள்ள காணொளியில் காணலாம்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri