மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்களை அழைத்து சென்று தவறான தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள்
இலங்கை பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகள் சம்பந்தமாக வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கண்டறிய விசாரணைக்குழுக்களை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள், தூதரக பிரிவின் அதிகாரிகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளை அடையாளம் கண்டு சடட நடவடிக்கை எடுப்பது இதன் நோக்கம் என கூறப்படுகிறது.
ஓமானில் பாதுகாப்பான வீடொன்றில் பாதிக்கப்பட்ட 41 பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் இவர்களில் 9 பெண்கள் சுயநினைவு இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam