காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்
மொனராகலை, வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 32 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பலத்த காயமடைந்த பெண்ணை மீட்டு வெல்லவாய மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவராகும். அவருக்கும் அவரது சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாக்குவாதம்
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதால், அவரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
YOU MAY LIKE THIS VIDEO
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam