காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் பெண்
மொனராகலை, வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 32 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பலத்த காயமடைந்த பெண்ணை மீட்டு வெல்லவாய மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவராகும். அவருக்கும் அவரது சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு கொலையில் முடிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாக்குவாதம்
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதால், அவரை கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி News Lankasri