கோர விபத்தில் பரிதாபமாக பலியான பெண்
கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டுகொட பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சீதுவை வைத்தியசாலை
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த பெண்ணும் இன்னுமொருவரும் சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri