இந்தியாவுக்கு யாத்திரை போவதாக கூறி யாசகம் பெற்று வந்த பெண்கள் கைது
அநுராதபுரத்தில், பல்வேறு பொய்யான காரணங்களை கூறி, யாசகம் பெற்று வந்த 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசாய போன்ற புனித ஸ்தலங்களுக்கு செல்லும் யாத்திரிகர்களை பின்தொடர்ந்து சென்ற 6 பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், கண் சத்திரசிகிச்சை, இந்தியாவிற்கு புனித யாத்திரை செல்வது போன்ற விசித்திரமான நோக்கங்களுக்காக யாசகத்தின் மூலம் பணம் வசூலித்தமை தெரியவந்துள்ளது.
முறைப்பாடுகள்
இந்த யாசகர்கள் தொடர்பில் ஏற்கனவே, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு யாத்திரீகர்களிடமிருந்து பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன.
இதன்படி, கைது செய்யப்பட்ட பெண்கள் தேவனம்பித்திஸ்ஸபுர, பதுலகம, வெஸ்ஸகிரிய, திசாவெவ, போன்ற இடங்களை சேர்ந்த 51 முதல் 80 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan
