கொழும்பில் பெருந்தொகை பணம், தங்கத்துடன் இளம் யுவதி கைது
கொழும்பு ராகம பகுதியில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் மாகாணம் - வடக்கு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபாய் பணம், 4 மில்லியன் மதிப்புள்ள தங்கம், 2 மின்னணு தராசுகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
கைது செய்யப்பட்ட பெண் களனி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேல் மாகாணம் - வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
