கொழும்பில் பெருந்தொகை பணம், தங்கத்துடன் இளம் யுவதி கைது
கொழும்பு ராகம பகுதியில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல் மாகாணம் - வடக்கு குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நடத்திய சோதனையின் போது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 1.1 மில்லியன் ரூபாய் பணம், 4 மில்லியன் மதிப்புள்ள தங்கம், 2 மின்னணு தராசுகள் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
கைது செய்யப்பட்ட பெண் களனி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேல் மாகாணம் - வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
