இலங்கை அதிவேக வீதியில் சொகுசு பேருந்தில் சாரதியாக பணி புரியும் முதல் பெண்! யார் இவர்?

Srilanka Matara
By Dhayani Jan 03, 2022 11:18 PM GMT
Report

இலங்கையில் அதிவேக வீதியில் சொகுசு பேருந்தில் முதன் முதலாக சாரதியாக பணி புரியும் பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை - தெவிநுவர கிராமத்தினை சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான லக்ஷி சசிந்தா இவ்வாறு 50 பயணிகளுடன் சொகுசு பேருந்தை செலுத்தி வருகின்றார்.

குறித்த பெண் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் பின்வருமாறு,

மாத்தறை தெவிநுவர கிராமத்தில் கருணாசேன மற்றும் பிரேமதாச தயாவதியின் பெற்றோருக்கு பிறந்த இரண்டாவது மகள் லக்ஷி சசிந்தா, சிறுவயது முதலே வித்தியாசமான அபிலாஷைகளைக் கொண்டிருந்தேன்.

மாத்தறை சுஜாதா பாலிகா வித்தியாலயத்தின் சிறந்த பழைய மாணவி.வணிகவியலில் உயர்தரத்தில் சித்தியடைந்து வெளிநாட்டுப் பட்டப்படிப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டில் ஐந்து பிள்ளைகள். இரு பெண் சகோதரிகளும். மூன்று ஆண் சகோதரர்கள். எனது சகோதரனுக்குப் பிறகு குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை. எனது தந்தையாருக்கு ஒரு ஹராஜ் இருந்தது.

சிறு வயதிலிருந்தே எனக்கு கார்கள் மீது அலாதியான விருப்பம் இருந்தது. லேடன் பஸ்கள் பெரும்பாலானவை எங்கள் அப்பாவின் ஹராச்சுக்கு பழுதுபார்ப்பதற்காக கொண்டு வரப்படும்.

இந்த பேருந்தை திருத்தம் செய்யும்போது சிறுவயதில் ஓட்டுனர் இருக்கையில் உட்காருவது வழக்கம். ஸ்ரேரிங்கினை சுழற்றி விளையாடுவதுடன் எனக்கு பேருந்துகள் பிடிக்கும். இவ்வாறாக அப்பா படிப்படியாக எனக்கு பேருந்து செலுத்தக் கற்றுக் கொடுத்தார்.

நான் 13-14 வயதில் வாகனம் செலுத்த முடிந்தது. அப்போது என் தந்தைக்கு சொந்தமாக ஜீப் இருந்தது. அப்பாதான் முதலில் ஸ்ரேரிங் பிடித்து ஜீப்பில் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். எனக்கு சின்ன வயசுல இருந்தே பலவித கனவுகள் இருந்தது. நண்பர்கள், வைத்தியர்கள் ,ஆசிரியர்கள்,சட்டத்தரணிகள் என உள்ளனர்.

ஆனால் நான் அரச வேலை செய்வதை என் தந்தை விரும்பவில்லை. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று அப்பா எப்போதும் என்னிடம் கூறினார். நான் பஸ் ஓட்டுநர் வேலையைத் தேர்ந்தெடுத்தபோது என் அப்பாதான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

என் அம்மாவும் ஆதரவைக் கொடுத்தார். நான் முதலில் எனது சகோதரரின் மஹரகம மாத்தறை நெடுஞ்சாலை பஸ்ஸில் மாதாந்த சம்பள சாரதியாக பணிபுரிந்தேன். இவ்வாறு உயர்கல்வி முடிந்து வீட்டில் இருந்தபோது வீட்டில் வேலை கிடைத்தது. அந்தச் சமயத்தில் தான் பாடசாலை மாணவர்களுக்கான சேவையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

நான் முதலில் சாரதி பயிற்சி பாடசாலை சென்று சாரதி பயிற்சி கற்கவில்லை என்றேன். என்னுடைய பயிற்சியாளர் அப்பா. நான் 12 அல்லது 13 வயதில் காரை செலுத்த முடிந்தது, ஆனால் எனது சாரதி அனுமதி கிடைக்கும் வரை அப்பா என்னை செலுத்தவிடமாட்டார். எனக்கு 18 வயதாக இருந்தபோது, எனது சாரதி அனுமதி கிடைத்தது.

ஆனால் ஒரு நாள் பஸ் செலுத்த வேண்டும் என்பது என் கனவு. சாரதி அனுமதி பெற எனக்கு 5 ஆண்டுகள் ஆனது. கனரக வாகன சாரதி உரிமம் பெண்களுக்கு வழங்கப்படாது என்று முதலில் நினைத்தேன்.

ஒரு நாள் நான் சென்ற மோட்டார் போக்குவரத்து ஆணையரிடம் தகவல் கேட்டேன். பெண்கள் தகுந்த தகுதிகளைப் பெற்றால் பேருந்து உரிமம் பெறுவதற்கு சட்டத் தடை ஏதுமில்லை என்றார். சாரதி அனுமதி பெறலாம் என்று தெரிந்ததும், உலகப் பட்டத்தை வென்றதுபோல் மகிழ்ச்சி அடைந்தேன். நான் கடினமாக உழைத்து எனது அனைத்து தகுதிகளையும் செய்தேன். 2008 இல் கனரக வாகன சாரதி அனுமதி பெற்றேன்.

சாரதி அனுமதி பெற்று, முதலில் பாடசாலைக்கு ஏற்றிச் செல்லும் சிறிய பேருந்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று . மாத்தறையில் உள்ள பல பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றேன்.

அன்றாடம் வாகனம் ஓட்டியதில் திருப்தி அடைந்த பெற்றோர் பிள்ளைகளை ஒப்படைக்கத் தயங்கவில்லை. பதினோரு அல்லது பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து பாடசாலைப் பேருந்தில் சாரதியாகப் பணிபுரிந்து, பாதுகாப்பு மற்றும் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார்.

சில நாட்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 25 இருக்கைகள் கொண்ட பேருந்தை நிறுத்திவிட்டு பிள்ளைகளை 48 இருக்கைகள் கொண்ட பேருந்தில் பயணிக்கத் தொடங்கினேன். அசோக் லேடன் பேருந்தின் ஆரம்ப நாட்களில் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

பயணிகள் போக்குவரத்து சேவையை விட பாடசாலை பேருந்தில் பணிபுரிவது ஒரு பொறுப்பாகும். உடம்பு சரியில்லாம ஒரு நாள் கூட லீவு எடுக்க முடியாது. எனக்குப் பதிலாக வேறொருவரை அனுப்ப முடியாது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லவும், அவர்கள் வீடு திரும்பும் வரை என்னை நம்புகிறார்கள். இதனால் பேருந்து சாரதியாக பல வருடங்கள் மாணவர்களை மகிழ்ச்சியுடன் பாடசாலைக்கு ஏற்றிச் சென்றேன்.

இவ்வாறான நிலையில் அந்த நேரத்தில் தான் தங்காலை நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அதிகார சபையின் பொறுப்பதிகாரியான ஒருவரை திருமணம் செய்தேன். இப்போது எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவ்வாறாக காலி - மாத்தறை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நிறைவின் பின்னர், லக்ஷி சேவையில் இணைவதற்கு அதிக நம்பிக்கை கொண்டிருந்தார், ஆனால் பல தடைகள் இருந்தன.

இந்தப் பயணத்தில் பெண் என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்ட இடங்கள் ஏராளம். இது குறித்து கூறுகையில் காலி - மாத்தறை அதிவேகப் பாதை நிறைவடைந்ததும் அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றை இயக்குவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கேட்டேன் ஆனால் அது எனக்கு வழங்கப்படவில்லை.

பெரிய கதிரைகளில் இருந்தவர்கள் எனக்கு நிறைய கூறினார்கள். ஏனென்றால் நான் ஒரு பெண் அனுமதி பெறுவதற்கான பல வாய்ப்புகளை கிடைக்கவில்லை . ஆனால் எல்லாரையும் போல் கோடிக்கணக்கான பணம் வைத்திருந்தால் உரிமம் பெற்று இன்னும் மேலே சென்றிருக்கலாம். இந்நிலையில் என் ஒன்றுவிட்ட சகோதரர் என்னை பஸ் சாரதியாக வேலை செய்யச் சொன்னார்.

கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். பல வருடங்களாக நான் எனது சகோதரரின் மஹரகம - மாத்தறை நெடுஞ்சாலைப் பேருந்தில் சாரதியாக மாதச் சம்பளத்திற்குப் பணிபுரிந்தேன். இதன்போது நான் முதலில் அனுமதிக்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் விண்ணப்பித்தேன்.

அப்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரேணுகா துஷ்மந்த, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெண்களை சாரதி நடத்துனர்களாக பணியமர்த்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்திருந்தார். தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டதால் சாரதிக்கு விண்ணப்பித்தேன்.

அதற்கு முதலில் விண்ணப்பித்தது நான் என்று நினைக்கிறேன். அதன்படி, தெற்கு அதிவேக வீதியில் 50 இருக்கைகள் கொண்ட அசோக் லேடன் பேருந்தில் சாரதியாக பணியாற்ற முடிந்தது.

மார்ச் 14, 2014 அன்று அதிவேக வீதியை திறந்து வைத்து போது அசோக் லேடனில் முதன்முதலில் பயணித்ததை அவர் இவ்வாறு விவரித்தார். அப்போது என்னால் நன்றாக பேருந்தினை செலுத்த முடியும். அன்று முதன் முதலில் பேருந்து மிக மெதுவாக நெடுஞ்சாலையில் நகர்ந்தது .

அப்பா என் அருகில் இருந்தார். அப்பா என்னுடன் இருந்ததால் எனக்கு சிறிதும் பயம் ஏற்படவில்லை. ஆண்கள்தான் வீதியில் இவ்வளவு நேரம் பஸ் செலுத்துகிறார்கள், அதனால் பஸ்ஸில் ஏறிய என்னை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

இதனால் நான் அன்று இலங்கையின் முதல் மற்றும் அதிவேக வீதியில் பயணித்த பஸ் சாரதியானேன். நான் ஒரு பெண் என்று நினைத்து நிறைய பேர் என் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

ஆனால் என்னுடன் பயணிப்பவர்களின் நம்பிக்கையை நான் இன்னும் சுமக்கிறேன், இன்னும் நான் அவர்களை பாதுகாப்பாக அவர்கள் இலக்குக்கு கொண்டு செல்கிறேன். சிலர் பேருந்தில் ஏறுகிறார்கள், நான் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்.

மக்கள் கீழே இறங்கி செல்லும்போது நான் மிகுந்த வருத்தத்தை உணர்ந்தேன். இப்போது எனது பேருந்தைத் தேடி வந்து ஏறி செல்லும் மக்கள் குழுவாக உள்ளது. அப்போது என் பேருந்தில் இருந்து இறங்கியவர்கள் இன்று என்னைக் கண்டுபிடித்து பேருந்தில் ஏறுகிறார்கள்.

மாத்தறை-கொழும்பு அலுவலக ஊழியர் போக்குவரத்தை ஆரம்பித்த முதல் சாரதியும் நான்தான். எனது பேருந்தில் முதலில் 7 பேர் இருந்தனர். என் கையில் எண்ணையுடன் இந்தப் பேருந்து நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

எனக்கு கொழும்பு வீதிகள் தெரியாது. அப்பா இரண்டு நாட்களாக வீதிகளைக் காட்ட வந்தார். அதன்பின் பகலில் முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுத்து கொழும்பு வீதிகளில் ஓடினேன் . அப்போது அலுவலகம் செல்லும் வீதிகளைக் கண்டு பழகினேன் என்றார்.

இவ்வாறாக ஓட்டுநர் பணியைச் தொடர்ந்து முயற்சியை கைவிடாததால் இன்று மூன்று சொகுசு பேருந்துகளை வைத்து பஸ் சாரதியாக பணிபுகின்றார். தற்போது நான் இந்த வேலையை 20 வருடங்களாக செய்து வருகிறேன்.

என்னிடம் சேவை செய்ய வருபவர்களுக்கு என்னால் முடிந்ததை வழங்குகிறேன். எனது பயணம் அப்பாவின் கடையில் தொடங்கியது. அங்குதான் எனக்கு இந்த விடயங்களில் ஆர்வம் ஏற்பட்டது. அப்பா எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தார்.

நான் வித்தியாசமாக சிந்தித்ததால் வாழ்க்கையில் நிறைய விடயங்களை வென்றேன். கோரிக்கை வைக்க விரும்புகிறேன். சாரதிப் பணியை விரும்பும் இளம் பெண்கள் இருந்தால், அவர்களுக்குப் பயிற்சி அளித்து எனது பேருந்துகளில் பணிபுரிய அவர்களுக்கு வேலை வழங்க விரும்புகிறேன்.

எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். எனது தொழில் வாழ்க்கைக்கு எனது கணவர் பெரும் உறுதுணையாக இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் அப்படித்தான்.

எனது பயணத்தில் பலமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார். ’தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளுங்கை’ என்ற பழமொழியை இன்று பெண்கள் வேறு பரிமாணத்திற்கு கொண்டு செல்வதை பல்வேறு நிலைகளில் துணிச்சலாக பார்க்கிறோம்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US