வத்தளையில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயம்
வத்தளை நகரில் உள்ள மருத்துவ பரிசோதனை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த பெண் பணிபுரியும் மருத்துவ பரிசோதனை நிறுவனத்திற்கு அவரது கணவர் நேற்று (15) காலை சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு கத்திரிக்கோலால் அவரது கழுத்தினை வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர் வத்தளை பொலிஸில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |