ஹப்புத்தளையில் தொடருந்திலிருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டுப் பெண்
கொழும்பிலிருந்து (Colombo) மலையக பாதை ஊடாக பதுளை (Badulla) நோக்கி பயணித்த தொடருந்திலிருந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மொரிசியஸ் (Mauritius) நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவரே காயமடைந்துள்ளார்.
குறித்த பெண், பட்டிப்பொல மற்றும் ஓஹிய(ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி) ஆகிய பகுதிகளுக்கு இடையிலான பயணத்தின் போது தவறி வீழ்ந்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதனை தொடர்ந்து, காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை (Diyatalawa) வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |