கொழும்பு புறநகர் பகுதியில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
கொழும்பு புறநகர பகுதியான கிரிபத்கொட முதியன்சலாகே வத்தே பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு பிரதேசவாசிகள் வழங்கிய தகவலையடுத்து கிரிபத்கொட பொலிஸாரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒருவர் வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கொடையில் உள்ள தேசிய மனநல நிறுவகத்தில் இருந்து பெறப்பட்ட மருந்து சீட்டுகள் குற்றம் நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan