மீட்டியாகொடவில் துப்பாக்கிச் சூடு - படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு
புதிய இணைப்பு
மீட்டியாகொடவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, இதனால் பாதிக்கப்பட்டவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்களை அடையாளம் காணவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
முதலாம் இணைப்பு
மீட்டியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |