யாழில் காணாமல் போயுள்ள குடும்ப பெண்! கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் நேற்று முன் தினத்தில் இருந்து குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்தநிலையில், குறித்த பெண்ணை கண்டு பிடிக்க உதவுமாறு பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் உதவி கோரியுள்ளனர்.
காணமல் போன குடும்ப பெண்
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த 29ஆம் திகதி இரவு கணவனுடன் இருந்த குடும்ப பெண், இரவு 11மணியளவில் தூக்கத்தில் இருந்து கணவன் எழுந்து பார்த்தவுடன் காணாமல் போயுள்ளார்.
அதனையடுத்து கணவன் மனைவியின் தாயிடம் மனைவி வந்துள்ளாரா என கேட்டுள்ளார். அங்கும் குறித்த பெண் போகவில்லை என தாயார் கூறியுள்ளார்.
இதன் பின் பதற்றம் அடைந்த கணவன் மற்றும் உறவினர்கள் குடும்ப பெண்ணை தேடியுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இதனை தொடர்ந்து காணமல் போன பெண் சம்பந்தமாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றுடன் குறித்த பெண் காணாமல் போய் மூன்று நாட்கள் கடந்து செல்லும் நிலையில் அனைவரின் உதவியினையும் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பம் கேட்டு நிற்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் திருவிழா



