பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி - சிசிடிவியில் சிக்கிய காட்சி
பண்டாரவெல, ஹல்பே பகுதியில் வைத்து பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட பெண் பேருந்திலிருந்து விழுந்துள்ளார்.
குறித்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
பண்டாரவெலயில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற குறித்த பெண் தனது சிறிய மகளை இறக்கி விட்டு பின் அவரும் இறங்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்து முன்னோக்கி இயக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண் மிதி பலகையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைபடுத்து அங்கிருந்த சிலர் குறித்த பெண்ணை தூக்கிவிட்டு பின் பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.