தென்கொரிய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்துள்ள பெண்-செய்திகளின் தொகுப்பு
தென்கொரிய ஜனாதிபதியை வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி யோன் சுக்-இயொல் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் அந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான உதவிகளை செய்வதற்கு தென்கொரியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தென்கொரிய அதிபரின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்துள்ளது. இது தொடர்பில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜாங் அறிக்கை விட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கிம் ஜோ, அவர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் அவரது மதிப்பிற்கு நல்லது' என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
