ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது (Video)
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேசத்தில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை கிரான் கோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி. எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரைக் கைது செய்ததுடன் அவரிடமிருந்து 510 மில்லிக்கிராம் ஹெரோயின், 610 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட பெண்ணை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு