கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தகர் ஒருவரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க பெண்டன்களை திருடிய குற்றச்சாட்டில் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இந்த வர்த்தகர் நேற்று அதிகாலை 05.00 மணியளவில் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
வர்த்தகர் கைது
டுபாயில் 118 கிராம் 980 மில்லிகிராம் எடையுள்ள 04 தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளதாகவும், இரண்டு கைக்குட்டைகளில் சுற்றப்பட்டு, சொக்லேட் போன்று தோற்றமளிக்கும் வகையில் காகிதப் பையில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த வர்த்தகர் கொழும்பு-10 ஐ வசிப்பிடமாக கொண்ட 45 வயதுடையவர் எனவும் அவர் அடிக்கடி விமான பயணங்களில் ஈடுபடுவதுடன் பல்வேறு வகையான பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
