திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்ற விமல் வீரவன்ச
திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பலாங்கொடை கஸ்ஸப தேரரின் சுகவீனம் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சென்றுள்ளார்.
கஸ்ஸப தேரர் நேற்றுமுன்தினம் (14) முதல் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று (15) மாலை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்தர்ப்பத்தில் இன்று (16.01.2026)திருகோணமலை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.மேலும் அவரை பார்ப்பதற்காக சீலரத்தன தேரரும் திருகோணமலை சென்றுள்ளார்.
திருகோணமலை டொக்கியாட் கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத கட்டுமானங்களை மேற்கொண்டமை மற்றும் புத்தர் சிலையை வைத்து அமைதியற்ற சூழலை உருவாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 11 பேருக்கு எதிராக துறைமுக பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பான விசாரணையின் போது, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 பிக்குகளும் 5 சிவிலியன்களுமாக மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri