மனோவுக்கு தேசியப் பட்டியல் வழங்குமா சஜித் அணி..! தொடரும் சிக்கல்
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படாததோடு, மனோ கணேசன் ( Mano Ganesan) உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்
தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராக செயற்படுவதுடன், எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
