இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
உள்ளூராட்சித் தேர்தல் என்பது அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அந்தத் தேர்தலை நடத்துவதற்கான சூழலும் நாட்டில் இல்லை. இவ்வாறான பின்னணியில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அரசியல் சூழ்ச்சி இடம்பெறுவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
உள்ளுராட்சித்
தேர்தல் மூலம் கூடுதலான பயனைப் பெற்றுக் கொள்ள சில அரசியல்வாதிகள்
முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.