இலங்கையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் பதில் - செய்திகளின் தொகுப்பு
பாம் எண்ணெய் இறக்குமதி தடை காரணமாக தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படுமாயின் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் , 'பாம் எண்ணெய் இறக்குமதி தடையின் காரணமாக தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்படுமா? ' என்று கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாம் எண்ணெய் இறக்குமதி தடை காரணமாக தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படுமாயின் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,