திருகோணமலையில் காட்டு யானைகள் அட்டகாசம்! மக்கள் கவலை
திருகோணமலை ,மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி கிராமத்திற்குள் நேற்றையதினம் (07) அதிகாலை உட்பகுந்த காட்டு யானைகள் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
இதன் போது தென்னை ,வாழை உள்ளிட்ட பல மரங்கள் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.
மக்கள் கவலை
அருகிலுள்ள கிரான் குளத்தில் காணப்படும் காட்டு யானைகள் மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் கிராமத்திற்குள் உட்புகுந்து சேதங்களை விளைவித்து வருகின்றன. இதனால் இரவு வேளைகளில் வீடுகளில் உறங்குவதற்கும் அச்சம் கொள்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அருகிலுள்ள கிராமத்தில் கடந்த மாதம் யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்ததாகவும் ,இச்சம்பவம் தமது கிராமத்திலும் நடந்து விடுமோ என்கின்ற அச்சம் காணப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் அரசாங்கமானது கிராமத்திற்குள் உட்புகாத வகையில் யானைப் பாதுகாப்பு வேலி அமைத்துத்தருமாறு மூதூர் - கிளிவெட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.










ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam