திருகோணமலையில் காட்டுயானை அராஜகம்: பொதுமக்கள் கவலை (Photos)
திருகோணமலை- கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் முச்சக்கரவண்டியொன்று காட்டு யானை தாக்கியதில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றையதினம்(07.06.2023) பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வீட்டில் வைத்து இவ்வாறு காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் யானை தொல்லை
இந்நிலையில் கந்தளாய் சீனி புர பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |