விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி தெரிவிக்கின்றது.
அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விஜயதாச ராஜபக்ச விமர்சனம் செய்த காரணத்தினால் இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்சவின் அரசியல் வரலாறு மற்றும் நடத்தைகளை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தம்மை கடுந்தொனியில் இழிவயாக திட்டியதாக விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.