கணவனை கொடூரமாக கொலை செய்த இளம் மனைவி : வெளியான காரணம்
புதிய இணைப்பு
தனது 14 வயது மகளின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பகிர முயற்சித்த தந்தை அவரது மனைவியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
யூடியூப் சேனலை திறந்து, அதனை பிரபலப்படுத்துவதற்காக இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை சேகரித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மனைவியையும் அவரது மகனையும் பூட்டிவிட்டு குறித்த நபர் மகளை அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயன்றபோது அவரது மனைவி வீட்டிற்குள் நுழைந்து, அவரது கண்களில் மிளகாய்ப் பொடியை எறிந்து, அவரை வாளால் தாக்கியுள்ளார்.
இதில் தாக்கப்பட்ட சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் படுகொலை செய்த பெண்ணை சந்தேகத்திற்குரிய பெண்ணை வெல்லவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
குருநாகல் பிரதேசத்தில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலை நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார என்ற 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப வன்முறை
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை கணவன் மனைவிக்கு இடையில் அவர்களது வீட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதுடன், அதன் போது மனைவி கணவனை வாளால் தாக்கியுள்ளார்.
மேலதிக சிகிச்சை
கழுத்து மற்றும் இடது காலில் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
