தென்னிலங்கையில் கணவனை கட்டிவைத்து கொடூரமாக கொலை செய்த மனைவி
ஹோரணையில் குடும்பத் தகராறு முற்றியதில், தனது கணவனை கொன்கிரீட் தூணில் கட்டிவைத்து அடித்துக் கொன்ற பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சல் உயன்வத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய காமிணி பத்மகுமார என்ற பேக்கரி தொழிலாளியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று அதிகாலை அதிக மதுபோதையில் அதே பகுதியில் உள்ள வீடொன்றுக்குச் சென்று அங்கிருந்தவர்களுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
கணவன் கொலை
வீட்டு உரிமையாளர் இது குறித்து சந்தேக நபரான மனைவிக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மனைவி, கணவனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். எனினும், கணவன் அதற்கு மறுப்பு தெரிவித்து மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி, குழப்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவனை அந்த வீட்டில் உள்ள தூணில் துணிப் பட்டியால் கட்டிவைத்துள்ளார். பின்னர் அங்கிருந்த துடைப்பத்தால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக நீதவான் விசாரணைகளும், தடயவியல் பொலிஸாரின் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரான மனைவி ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் ரங்க பெரேரா தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.