தனது கணவனுக்கு இழைத்த கொடூரத்தை 33 வருடங்களுக்கு பின்னர் ஒப்புக்கொண்ட மனைவி
33 வருடங்களுக்கு முன்னர் தனது தாயும், தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை கொலை செய்ததாக நபர் ஒருவர் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடு இன்றைய தினம் (15.05.2023) கொடுக்கப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊருபொக்க பொலிஸ் நிலையத்திற்கு எமது ஊடக பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போது,
தற்போது வலது குறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” எனத் தனது சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார்.
தோண்டப்படவுள்ள உடல் எச்சங்கள்
இதனையடுத்து, அவரது மகன் தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையைக் கொலை செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும், தனது தந்தை கொன்று புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கழிவறை குழியையும் அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் அடையாளம் காட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, ஊருபொக்க பொலிஸார், நீதிமன்றில் அறிவித்துள்ளதோடு, உடல் எச்சங்கள் இன்றைய தினம் (15.05.2023) நீதவான் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |