சுசிலின் பதவி பறிப்பின் பின்னணியில் நடந்தது? திஸ்ஸகுட்டியாராச்சிக்கு புலனாய்வு அறிக்கைகளை கசியவிட்டது யார்?
புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்த கருத்துக்கு சுசில் பிரேமஜயந்த பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், திஸ்ஸகுட்டியாராச்சிக்கு புலனாய்வு அறிக்கைகள் எவ்வாறு கசிந்தன என்பதை உடனடியாக ஆராய வேண்டும் என சுசில் பிரேமஜயந்த வலியுறுத்தினார். ஊடகங்களிடம் நேற்று பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உண்மையில் ஆபத்தான ஒன்று. திஸ்ஸகுட்டியாராச்சி போன்ற ஒருவருக்கு புலனாய்வு அறிக்கைகள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அரச புலனாய்வு சேவையை (SIS) கேட்டுக்கொள்கிறேன்.
கண்காணிப்பு பட்டியலில் இருக்க வேண்டியது என பெயர் அல்ல. புலனாய்வுப் பிரிவினர் இதைப் பற்றி ஆராய்ந்து, நாட்டில் நிலவும் பிரச்சினைகள், குறிப்பாக மக்கள் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கையிட வேண்டும்” என பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan