என்னை கைது செய்ய சூழ்ச்சி செய்வது யார்? கேள்வியெழுப்பும் முக்கிய நபர்
தம்மை கைது செய்வதற்கு சூழ்ச்சி செய்யப்படுவதாகவும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்துவதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதனால் இவ்வாறு தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர்களான பந்துல குணவர்தன, லசந்த அழகியவன்ன மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரே தம்மை கைது செய்ய முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் வெளிநாடு செல்ல முயற்சித்த போது அதனை தடுத்து நிறுத்தியமைக்கான காரணம் இதுவே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல் பற்றி அம்பலப்படுத்திய தம்மை குற்றவாளியாக்கியிருப்பது ஆச்சரியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகள் இடம்பெற்றால் அதனை கண்டுகொள்ளக் கூடாது, அதற்கு எதிராக குரல் கொடுத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என்பதனை தாம் கற்றுக்கொண்டாக துசான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், தாம் இந்தப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும், தமக்கு எதிரான சூழ்ச்சி செய்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் போக்குவரத்து தடை? - அமைச்சர் முன்வைத்துள்ள யோசனை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |