நாடாளுமன்றத்தை வழிநடத்துவது யார் மஹிந்தானந்தவா? சபாநாயகரா? - ஆத்திரமடைந்த அநுரகுமார
நாடாளுமன்றத்தை வழி நடத்துவது யார்? நீங்களா? மஹிந்தானந்தவா? என்னை அமரச் சொல்கின்றார். என்னை தடுக்கவும், உரையை நிறுத்தவும் முயற்சிப்பது நீங்களா? அல்லது மஹிந்தானந்தவா? இதற்கு எனக்கு பதில் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க(Anura Dissanayaka) கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றையதினம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அநுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்ப முற்படுகையில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அவரை தடுக்க முயன்றமையால் ஆத்திரமடைந்த அநுர குமார, நாடாளுமன்றத்தை வழி நடத்துவது மஹிந்தானந்தவா அல்லது சபாநாயகரா என கேள்வி எழுப்பிய நிலையில் வாதப்பிரதிவாதங்கள் முற்றியது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தை வழி நடத்துவது யார்? நீங்களா? மஹிந்தானந்தவா? என்னை அமரச்
சொல்கிறார். என்னை தடுக்கவும், உரையை நிறுத்தவும் முயற்சிப்பது நீங்களா?
அல்லது மஹிந்தானந்தவா? இதற்கு எனக்கு பதில் வேண்டும். உங்களுடைய இந்தப்
பிரச்சினைதான் நாடாளுமன்றத்தில் பிரச்சினையாகவே உள்ளது.
கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டுமே. மஹிந்தானந்த தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் என்னைப் பற்றியும், கட்சிப் பற்றியும் என்ன வேண்டுமோ தெரிவிக்க முடியும். இருக்கிறது எனப் பொய்யாகக் கோப்புகளைக் குலுக்க வேண்டாம். நான் வேண்டுமென்றால் உங்களைப் பற்றி தெரிவிக்கின்றேன்.
நான் இங்குள்ள வெளியில் நிறையவே தெரிவித்திருக்கின்றேன். நினைப்பதையெல்லாம் தெரிவிக்கின்ற பொறுப்பற்ற, இந்த அமைச்சர். வெட்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த, அநுர குமார திசாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது மறைக்கப்பட்ட இரகசியத்தை தன்னால் வெளியிட முடியுமெனக் குறிப்பிட்டார்.
எனக்கு கூற விருப்பமில்லை. விவசாய அமைச்சின் மலசலக்கூடத்தில் கிடைத்தவைத் தொடர்பில் என்னால் தெரிவிக்க முடியும். நான் அங்கு செல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறெனினும் இதற்கு பதிலளித்த அநுர குமார திசாநாயக்க, ”முடிந்தால் ஒரு
நிமிடமாவது நிலைக்கக்கூடிய பொய்யான தகவலை வெளியிடுமாறும், விநாடிக்கு விநாடி
மாறும் கருத்துக்களை வெளியிட வேண்டாம்” எனவும் வலியுறுத்தினார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரு நாடுகளில் நிரந்திர குடியுரிமை! மோசடி செய்த பல கோடியுடன் சொகுசாக வாழ்ந்த தமிழ் தம்பதி.. வெளிவரும் பகீர் தகவல் News Lankasri

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

விஜய், அஜித் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்த இடத்தில், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் படைத்த சாதனை.. Cineulagam

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன சொல்ல விரும்புறீங்க? ஆங்கிலத்தில் பதிலளித்த பேரறிவாளன் வீடியோ News Lankasri

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்.. Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada
20 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022