எந்த திட்டமும் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையற்றவர்கள் - பூ.பிரசாந்தன்
ஒரு கட்சியில் நிரந்தரமாக நின்று அரசியல் செய்யமுடியாமல் மக்கள் தொடர்பான எந்த திட்டமும் இல்லாதவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு அருகதையற்றவர்கள் எனத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுமி ஹிசாலினிக்கு ஏற்பட்ட சம்பவம்போன்று இனியொரு காலங்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் செயற்படாத வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
சிறுமி ஹிசாலினிக்கு நடைபெற்ற சம்பவம்போன்று ஏனையவர்களுக்கு நடைபெறக்கூடாது எனப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் போது இதனைச் சிலர் தங்களுக்கு அரசியலாக்கிக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துசெல்லும் நிலையில், இஸ்லாமிய மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணக்க அரசிலை செய்வதற்காக இதற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.