கோவிட் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அறிவிப்பு
கோவிட் பெருந்தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கோவிட் 19 வைரஸ் தொடர்ந்தும் உலக அவசர நிலைமை கிடையாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அட்னாம் தெரிவித்துள்ளார்.
கோவிட் 19 வைரஸ் பொதுச் சுகாதார அவசர நிலையாக கடந்த 2020ஆம் ஆண்டு பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

2020ஆம் ஆண்டில் கோவிட் உலகம் முழுவதும் பெருந்தொற்றாக மாற்றமடைந்திருந்தது.
கோவிட் வைரஸ் குறித்த ஆபத்து நிலை
எனினும், இன்றளவிலும் சீனாவில் கோவிட் பெரும் தலைவலியாகவே காணப்படுகின்றது.
சீனாவில் கோவிட் கட்டுப்பாட்டை எதிர்த்து மக்கள் போராடியதனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தடுப்பூசி ஏற்றுகை மற்றும் கோவிட்டின் வீரியம் குறைந்தமை உள்ளிட்ட காரணிகளினால் வைரஸ் குறித்த ஆபத்து நிலை குறைவடைந்துள்ளது.
எனவே கோவிட் அவசர நிலைமை அறிவிப்பினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri