மன்னாரில் வெண் ஈ தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல்
மன்னாரில் வெண் ஈ தாக்கத்தினை கட்டுப்படுத்தி நாளடைவில் தடுப்பதற்கான முதல் கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (15.03.2024) காலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதில் கண்டி மாவட்ட பயிர் பாதுகாப்பு சேவை நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் கலந்து கொண்டு, பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கமளித்துள்ளார்.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில், யாழ். திருநெல்வேலி விவசாய உதவிப்பணிப்பாளர், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சகிலா பானு, பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.