பிடிவிராந்து உத்தரவு பிறக்கப்பட்டவர்களுக்கு பிரதி அமைச்சர் அடைக்கலம் வழங்குகின்றாரா
நாட்டில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களுக்கு நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அடைக்கலம் வழங்குகின்றாரா என பிவிதுருஹெல உருமாய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
பிவிதுருஹெல உருமாய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
போலிஸ் மா அதிபர் யார் என்பதையும் சட்ட நிபுணர் மற்றும் நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறியவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
சுனில் வட்டகல, அண்மையில் கூட்டமொன்றில் பேசும்போது தேசபந்து தென்னக்கோனை முன்னாள் போலிஸ் மா அதிபர் என குறிப்பிட்டிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரியந்த வீரசூரிய இன்னமும் நாட்டின் பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேசபந்து இன்னும் போலிஸ் மா அதிபராக பதவி வகிப்பதே காரணம் என்பதுகூட சுனில் வட்டகலவிற்கு தெரியவில்லை என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
தேசபந்து 65,000 சதுர அடிகள் கொண்ட நிலப்பகுதியில் ஒளிந்திருக்கிறார் எனவும், இது சுமார் 239 பர்ச் அல்லது 1.5 ஏக்கர் அளவுடைய பகுதி எனவும் சுனில் வட்டகல கூறியிருந்தார் எனவும், இத்தகைய சிறிய பகுதியிலே ஒளிந்திருக்க வேண்டும் என்றால், அங்கு 20 போலீசாரை அனுப்பினால் ஒரு மணி நேரத்திற்குள் அவரை கைது செய்யலாம் அல்லவா எனவும் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு முன்னர் பாதாள உலகத்தின் தலைவரான ஒருவர் மத்துகம பகுதியில் ஒளிந்திருப்பதாக நீதி பிரதி அமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில், நீதி பிரதி அமைச்சர் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்களை மறைத்து வைத்திருக்கின்றாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
