மட்டக்களப்பில் செய்வினையை அகற்றுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்த பெண் பூசாரி!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Bavan Jan 25, 2023 05:50 AM GMT
Report

மட்டக்களப்பு நகர்பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் செய்வினை அகற்றுவதாக கூறி பணம் தங்க ஆபரணங்களை திருடிய போலி பெண் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று (24.01.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொக்கட்டிச்சோலை கடுக்காய்முனையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் 22 ஆம் திகதி மட்டக்களப்பு நகர் பகுதியில் குடியிருந்து வாழ்ந்துவரும் அறிமுகமானவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் செய்வினையை அகற்றுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்த பெண் பூசாரி! | What The Priestess Did

பூஜை ஏற்பாடுகள்

இதன்போது அந்த வீட்டின் பகுதியில் செய்வினை செய்திருப்பதாகவும் நான் நாககன்னி தெய்வம் ஆடி அதனை அகற்றி தருவதாக பெண் போலி பூசாரி தெரிவித்ததையடுத்து, வீட்டின் உரிமையாளரும் பூஜை செய்ய உடன்பட்டுள்ளார்.

சம்பவத்தினமான இரவு செய்வினையை அகற்றுவதற்கான பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, பூஜை தட்டில் 60 ஆயிரம் ரூபா பணமும் தங்க ஆபரணங்கள் வைக்கவேண்டும் என கோரியதையடுத்து, அதனை வெள்ளை துணியால் கட்டியவாறு பூஜை தட்டில் வைத்து பூஜை நடைபெற்றுள்ளது.

இதன் பின்னர் போலி பெண் பூசாரி அந்த அறை கதவை மூடிவிட்டு கதவை 10 தினங்களுக்கு திறக்க கூடாது. அங்கு நாக கன்னி உலாவருவார் எனவும் 10 தினங்களின் பின்னர் நான் கதவை திறந்து வந்து துணிலால் கட்டிவைக்கப்பட்ட பூஜை தட்டினை அவிழ்த்து தருவாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.

மட்டக்களப்பில் செய்வினையை அகற்றுவதாக கூறி அதிர்ச்சி கொடுத்த பெண் பூசாரி! | What The Priestess Did

பெண் பூசாரி

வீட்டின் உரிமையாளர் போலி பெண் பூசாரி  தெரிவித்த 10 நாட்கள் முடிந்ததும் அவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து, பூஜை அறைக் கதவை திறந்து சென்று துணியால் கட்டி வைக்கப்பட்ட பூஜை தட்டினை அவிழ்த்து பார்த்தபோது அங்கு தட்டில் வைக்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவும் தங்க மோதிரத்தையும் பெண் பூசாரி திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக பொலிஸாரிடம் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த பெண்ணை மட்டு. தலைமையக பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், இவர்  கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பல வீடுகளில் செய்வினை இருப்பதாகவும் அதனை எடுத்து தருவதாக தெரிவித்து பணம் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றதாக 6 க்கு மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US