வவுனியாவில் 55 நாட்களாக இடம்பெறும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பதில் என்ன ? பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
வவுனியா - சிறிநகரத்தில் வசிக்கும் மக்களுக்கு காணி ஆவணங்களை வழங்குமாறு கோரி சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்று வருகின்றது .
இந்நிலையில், குறித்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவாக இன்று வவுனியா நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
குறித்த சுவரொட்டிகளில் "அரச நிர்வாகமே 55 நாட்களைக் கடக்கும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பதில் என்ன ? '' என்று பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
இச்சுவரொட்டிகளுக்கு சிறிசனசமூக நிலையம் உரிமை கோரி பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.