இலங்கையின் தற்போதைய நிலை என்ன....! பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை எனவும், நாட்டின் கையிருப்பை அதிகரிக்க மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் தேவை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
கூட்டு வர்த்தக சம்மேளனம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் உள்ளிட்ட வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமரால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததன் பின்னர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுடனான உறவு முறிவு
நெருக்கடியைத் தணிக்க உதவும் எந்தவொரு நிதிப் பாலமும் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கையில் தங்கியுள்ளது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்கொடை அளிக்கும் நாடுகளுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் ஜப்பானுடனான முறிந்த உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் அவர்களின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கு சிறிது காலம் எடுக்கும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
