நாட்டுக்கு தேவையானது ஹிட்லர் பாணியிலான ஆட்சியல்ல! - எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கைக்கு தேவை மனிதர்களை கொலை செய்யும் ஹிட்லர் பாணியிலான ஆட்சியில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களை வாழ வைக்கும் ஆட்சியே தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செல்லக்கதிர்காமம் - கரவிலே பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உலகத்திற்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.
நண்பர்களே எமக்கு தேவை மனிதர்களை கொலை செய்யும் ஹிட்லர் ஆட்சியல்ல. எமது நாட்டுக்கு தேவை கொலை கலாச்சாரம் அல்ல.
நாம் தற்போது செய்ய வேண்டியது கொலைகளை அல்ல, மக்களை வாழ வைக்க வேண்டியதையே நாம் செய்ய வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்டிருந்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.