நாம் என்ன தவறு செய்தோம்! ஒரு குடும்பத்தின் வேதனைக் குரல் (Photo)
அப்பாவி பொதுமக்களின் வீடுகளுக்கு தீ வைக்காமல் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு நீர்கொழும்பில் பாதிக்கப்பட்ட தம்பதியர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்கொழும்பில் வசிக்கும் குறித்த தம்பதிகளின் வீடு சூறையாடப்பட்டதுடன், தங்க நகைகள், ஆடைகள், புத்தகங்களுடன் கூடிய பாடசாலைப் பைகள் என்பன திருடப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மையின் போது குறித்த வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் தாங்கள் பங்குகொண்டதாகத் தெரிவித்த தம்பதியினர், இந்த பிரச்சினைக்கு வன்முறை தீர்வாகாது எனவும் தெரிவித்தனர்.
வீடுகள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்தி, பல குழந்தைகளை கடுமையாக பாதித்துள்ளதால், குழந்தைகள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
எந்த அரசியல்வாதிகளுடனும் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்திய தம்பதியினர், நாம் என்ன தவறு செய்தோம் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த நபர் ஒரு மதப் போதகர் என்றும் தாங்கள் மிஷனரி சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தள்ளனர்.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam