இலங்கை அணியை தோற்கடித்த மேற்கிந்திய தீவுகள் அணி
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.
5 விக்கெட்டுக்கள்
இதில், கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களையும், சரித் அசலங்க 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 180 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இதில், பிரன்டன் கிங் 63 ஓட்டங்களையும், எவின் லீவிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது 20க்கு20 போட்டி நாளையதினம் தம்புள்ளையில் நடைபெறவுள்ளதோடு மூன்றாவது போட்டி அக்டோபர் 17ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
