மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்: 183 இடங்களில் முன்னிலையில் பாஜக
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்றைய தினம் (மே 4 ) வெளியாகவுள்ளன.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக முறைப்பாடு எழுந்ததை அடுத்து, ஃபால்டா தொகுதிக்குட்பட்ட 285 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
இறுதி முடிவுகள்
இதனால், ஃபால்டா தொகுதி தவிர்த்து 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி மேற்கு வங்கத்தில் பாஜக 183 இடங்களில் முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 105 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாஜக 183 தொகுதிகளில் முன்னிலை
காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. மற்றவர்கள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அக்கட்சிக்கு இத்தேர்தலில் கடும் சவாலை கொடுத்துள்ளது.
148 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலையில், பாஜக தற்போதே 183 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால் அங்கே பாஜக-வே ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.