சட்டத்தை மீறி திருமணம் - சீல் வைக்கப்பட்ட ஹோட்டல்
வவுனியா நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் சுகாதார வழிக்காட்டல்களை மீறி திருமண வைபவத்தை நடத்தியமையால் ஹோட்டலை சீல் வைத்து மூடியுள்ளதாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளார்.
பதிவு திருமண நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள 15 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக குறித்த ஹோட்டலையும் மண்டபத்தையும் மறு அறிவித்தல் விடுக்கும் வரை சீல் வைத்து மூட நடவடிக்கை எடுத்ததாகவும் வைபவத்தில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் கூறியுள்ளனர்.