நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
தற்போதைய நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் வயது வந்தோர் 3 லீற்றர் நீரையும் சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும் குடிப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூரிய ஒளி
நீருக்கு மேலதிகமாக தர்பூசணி, தோடம்பழம் போன்ற நீர் சத்துக்களை கொண்ட பழங்களை சாப்பிடுவதும் மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்பம் மற்றும் சூரிய ஒளி அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதனை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
வேலைக்குச் செல்வோர் அதிக தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் பொருத்தமானது என மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam