2024 இல் இலங்கையில் சுனாமி வதந்தி தொடர்பில் மக்களுக்கு முக்கிய தகவல்
இந்த வருட இறுதியில் சுனாமி அனர்த்தம் உருவாகி இலங்கையில் பல பகுதிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்னும் ஒரு கருத்து சமூக ஊடகங்ளில் பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அது ஒரு தவறான கருத்து எனவும் சுனாமி அல்லது புவிநடுக்கம் ஆகியவை ஏற்படுவதற்கான எதிர்வுகூறல்களை ஒருபோதும் முன்னைக்க முடியாது என யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், அதனை நிகழும் போது எதிர்கொள்வது தான் மிக முக்கியமான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ள அதேவேளை, 2024ஆம் ஆண்டு சுனாமி பேரலை ஏற்படும் என்னும் கருத்து ஒரு வதந்தி எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவ்வாறு பரப்பப்படும் இந்த செய்தி எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாத ஒன்று, எனவே இது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என பிரதீபராஜா கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை குறித்து லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு தகவல் வழங்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri