குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இலங்கையின் வடகிழக்கில் நிலைப்பெற்றுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்தும் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (15.05.2026) பிற்பகல் இரண்டு மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மேலும், இந்த அமைப்பின் தாக்கத்தால் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும்.
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - அடுத்தடுத்த வாரங்களில் ஏற்படப்போகும் விலை மாற்றம்
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையிலான கடலோர பகுதிகளில் கடல் அலையின் உயரம் சுமார் (2.0 - 2.5) மீட்டர் வரை உயரம் வரை அதிகரிக்கக்கூடும் (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழையின் போது கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பலத்த மழைவீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலை 09.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் காலநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
இதேவேளை இன்று (15.05.2026) மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
பலத்த மழை
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான மிக பலத்த மழை பெய்யக்கூடும். அத்தோடு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam