மழை வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு: பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (Video)
நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது.
அதன்படி லபுகமவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நீர் மட்டம் உயர்வு
இதேவேளை, தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கிங் கங்கை மற்றும் நில்வல கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வல ஆறு நிரம்பி வழிவதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு
காலி மாவட்டத்திலும் அடை மழை காரணமாக ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
