இலங்கையில் அரிசி தட்டுப்பாடு அச்சம்: செல்வந்தர்கள் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் செல்வந்தர்கள் பெருமளவு நெல்லை கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என பரவி வரும் வதந்திகள் காரணமாக இவ்வாறு நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நெல் விற்பனை
திஸ்ஸமஹாராம, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம் மற்றும் புத்தள போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கூடுதல் தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல் 165 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக கொழும்பைச் சேர்ந்த செல்வந்தர்கள் இவ்வாறு கொள்வனவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பயறு, கௌபி உள்ளிட்ட தானியங்களின் விலை அதிகரிப்பு
பயறு, கௌபி போன்ற தானியங்களின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அவற்றையும் செல்வந்தர்கள் களஞ்சியப்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹாரம, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளின் கிராமங்களில் செல்வந்தர்கள் சஞ்சரிப்பதனை காண முடியும் எனவும், அவர்கள் இவ்வாறு கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam