அதிகாரத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை : ஆளும் தரப்பு பகிரங்கம்
அதிகாரத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டினதும் உள்ளுராட்சி மன்றங்களினதும் ஆட்சி அதிகாரங்களை மிகுந்த அர்ப்பணிப்புக்களை செய்து பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரத்தை இலகுவில் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களின் நலன்
கெஸ்பேவ நகரசபையின் நகரபிதா பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது கெஸ்பாவ நகரசபையின் அதிகாரபூர்வ ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி நியமிக்கப்பட்டது முதல் அதிகாரபூர்வமற்ற வகையில் பணிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே நாட்டினதும் உள்ளுராட்சி மன்றங்களினதும் ஆட்சி அதிகாரத்தை அர்ப்பணிப்புடன் பெற்றுக்கொண்டதாக லக்ஸ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

Optical illusion: உங்கள் கண்களுக்கு உயிர் உள்ளது எனில் இதில் இருக்கும் நேரான “28” எங்கே உள்ளது? Manithan

எடை குறைக்க ஜிம் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது..நீதா அம்பானியின் உடற்பயிற்சி நிபுணர் விளக்கம் Manithan

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
